Free food parcel distributing for road side mentally disorders and old age people

 அன்னதானம் வழங்கும் பணி 

சாலையோர மனநிலை குன்றியோர், முதியோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கும் பணி..... 1-06-2017






Free clothe bags issued to kodaikanal tourists
 and Eco awareness stickers are pasted 

பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில்
சுற்றுலா பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கு பணி ...
பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கும் பணி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்றது. பழனி வனச்சரகர் கணேஷ்ராம் கலந்து கொண்டு துணிப்பைகள் வழங்கி சுற்றுலாவாசிகளுக்கு வனத்தின் மேன்மையை எடுத்த கூறினார் . சுற்றுலாவாசிகள் கொண்டு சென்ற பிளாஸ்டிக் பைகளை பெற்றுக்கொண்டு 1000க்கும் மேற்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டன . 

மேலும் பழனிமலை காட்டுயிர்  பாதுகாப்பு குழுவின் சார்பாக வழங்கப்பட்ட வனவிலங்குகளுக்கு உணவளிக்க கூடாது, கொடைக்கானல் மலையில் காணப்படும் காட்டெருமை, ஆடு, மான் போன்ற விலங்குகளை பாதுகாப்பது,  காட்டுத்தீயின் தீமைகள் போன்ற சுற்றுசூழல் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் சுற்றுலா வாகனங்களில் ஒட்டப்பட்டன. பழனி வனசரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல் சாலையில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க உள்ளதாகவும் வனச்சரகர் கணேஷ் ராம் தெரிவித்தார் . இயற்கையை காக்கும் இந்த பணியில் சேவா டிரஸ்ட் உறுப்பினர்கள், வனப்பாதுகாவலர் துரை உள்ளிட்ட வனத்துறையினர் பங்கேற்றனர்.

 

பண்பாட்டு பயிற்சி முகாம் 2-6 May - 2016
Youth Camp in Palani

இந்த முகாமில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் , அன்னை சாரதா தேவி , சுவாமி விவேகானந்தர் , மகாபாரதம் போன்ற பல்வேறு நூல்கள்  வழங்கப்பட்டு மாணவர்களும் அவற்றை படித்து வந்தனர் . மேலும் இயற்கையை காப்பதின் அவசியம் , நமது பாரம்பரிய பண்பாட்டு பழக்க வழக்கங்கள் , இயற்கை உணவு முறை, எளிய யோகசனப்பயிற்சி, விளையாட்டு போன்றவை கற்றுத்தரப்பட்டன .
         முகாம் நடத்த இடம் வழங்கிய சுவாமி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்திற்கும், பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றிய நண்பர்களுக்கும், முகாமிற்கு குழந்தைகளை அனுப்பி வைத்த பெற்றோருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து
கொள்கிறோம்

.






Medical Camp at Tribal Village 'Ponthupuli'

Treatment , Medicines, Dresses, Tooth paste and brush, Bathing Soap are provided to tribal families. 

பழங்குடியின கிராமத்தில் மருத்துவ முகாம்
  31-1-2016 அன்று   பொந்துபுளி என்ற பழங்குடியின கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது . குழந்தைகள் நல மருத்துவர் உயர்திரு . மாரிமுத்து அவர்கள் ஆறுகளையும் வாய்க்கால்களையும் தாண்டி வந்து  மக்களுக்கு சிகிச்சை அளித்தார் . தேவையான மருந்து மாத்திரைகளோடு போர்வைகள் , சேலை, சட்டை, குழந்தைகளுக்கான ஆடைகள் , டூத் பேஸ்ட் மற்றும் பிரஷ் , குளியல் சோப் ஆகியவையும் வழங்கப்பட்டன . முகாமில் பழனி விநாயகா லேப் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது  , பாலசமுத்திரம் அம்மன் மெடிக்கல் சார்பில் மருந்துகள் வழங்கிப்பட்டன .







Swami Vivekanadar 153 Jayanthi celebration


சுவாமி விவேகானந்தரின் 153 வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பேரணியாக சென்றனர். அருள்மிகு  பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகர முத்து தலைமை  தாங்கினார். மாணவர்கள் பேரணியை நகர் மன்ற தலைவர் வேலுமணி துவக்கி வைத்தார். பழனியாண்டவர் கலைக்  கல்லூரி  முதல்வர் அன்புச்செல்வி நாட்டு நலப்பணி  திட்ட அலுவலர்கள் கெளதமன் பழனிசாமி கங்காதரன்  மனோகரன் தேசிய மாணவர் படை அலுவலர் பாக்யராஜ் பேராசிரியர்கள் திருப்பதி ஜோதிஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர் . மேலும் இந்த பேரணியில் சுப்ரமண்யா பொறியியல் கல்லுரி மாரிச்சாமி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும்  ஆர் ஆர் ஐ டி ஐ , பாலமுருகன் பாலிடெக்னிக் , சுப்ரமண்யா கலை கல்லுரி பழனியாண்டவர் தொழில் நுட்ப கல்லுரி ஆகிய நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர் .
      
                     அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் இருந்த சுவாமி விவேகானந்தர் திருவுருவ  சிலைக்கு  நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் மயில்சாமி சுப்புராஜ், பழனி அரிமா சங்க தலைவர் ராமோஜி , பெருமாள், மாயகிருஷ்ணன்  பாலதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவை சேகர்ஜி  , அண்ணாமலையார்  நாயகி ட்ரஸ்ட் ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமி  சேவா ட்ரஸ்ட்   , ஸ்ரீ ரமண மந்திரம்  சோமசுந்தரம் மகாகவி பாரதியார் தமிழ்சங்கம் மணி  ஆகிய அமைப்புகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது . இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தனர் .

 வள்ளுவர் தியேட்டர் செந்தில் ஜெயம் கன்ஸ்ட்ரக்சன்  சந்திர சேகர்  ஜே ஆர் சி சின்ராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி முன்பு துவங்கிய பேரணி காந்தி மார்க்கட் வழியாக வாசவி மஹாலை சென்றடைந்தது . அங்கு பழனி வாசவி கிளப் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது . பின்பு அனைத்து மாணவர்களுக்கும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன . 1000 கும் மேற்பட்ட விவேகானந்தரின் சிந்தனை துளிகள் என்ற சிறு புத்தகம் வழங்கப்பட்டன




Provided Food And Blankets To Mentally Disorder Peoples And Old Age Peoples

On 3-1-2016 Our trust had been provided food and blankets to mentally disorder peoples and old age peoples

3-1-2016 அன்று பழனியில் உள்ள மனநலம் குன்றியோர் மற்றும் முதியோருக்கு உணவு மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன .





Palani Government Hospital White washing by our trust on 19-12-2015

  பழனி அரசு மருத்துவமனையின் சுற்றுச் சுவரில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தங்களது விளம்பரங்களை செய்திருந்தனர் . பழனி விவேகானந்தா சேவா ட்ரஸ்டின் சார்பில் மருத்துவ அதிகாரியின் அனுமதி பெற்று விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வெள்ளை அடிக்கப்பட்டது . மீண்டும் அந்த சுவற்றில் விளம்பரங்கள் செய்யாமல் இருக்க மருத்துவம் சார்ந்த பொன்மொழிகள் எழுதப்பட உள்ளது.







Tree Planting in APA College Palani on 17-12-2015

Flood Relief Activity - 2015

On (7-12-2015) We have donated Blankets , Dhotis, Towels, Tooth Power, Saree, Bread pockets , Swetter, Milk Poder for children. Total cost of these materials is 52,700. 

இன்று கீழ்காணும் பொருட்கள் கடலூர் பகுதி மக்களுக்கும்  ஒரு பகுதி சென்னைக்கும்  அனுப்பி வைக்கப்பட்டன .இதன் மொத்த மதிப்பு 52,700          போர்வைகள் - 150     கைலி வேட்டிகள் - 50    சேலைகள் - 15  பல்பொடி - 1000 பாக்கெட்டுகள்   பால் பவுடர் - 1500 ரூபாய்க்கு பிரெட் பாக்கெட்டுகள் - 500     குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஸ்வெட்டர் - 20   துண்டுகள் - 40







தரித்ர தேவோ பவ ; மூர்க்க தேவோ பவ (ஏழையும் அறியாமையில் இருப்பவனும் உனது தெய்வங்களாகட்டும் )


பாலாறு அணை ஜீரோ பாய்ன்ட் அருகில் உள்ள மலை மீது இரண்டு பழங்குடியினர் குடும்பம் வசிப்பது பற்றி கேள்விப்பட்டோம் . ஒரு வாரத்திற்கு முன்பு அங்கு சென்று பார்த்த பிறகு மனம் வெதும்பி போனோம் .அவர்களின் வாழ்க்கை முறை அவலமானது . ரேசன் அரிசியினை விலைக்கு வாங்கி ஒருவேளை மட்டும் உண்கின்றனர் . குடிநீரை எடுத்துக்கொண்டு அவர்கள் ஏறி வரும் அந்த மலைமீது நாம் நின்றாலே தலை சுற்றும் .
அவர்களுக்கு சில அடிப்படை வசதிகள் தேவையாக இருந்தது . எனவே சென்ற ஞாயிற்றுகிழமை  (4-10-2015) அவர்களுக்கு இரண்டு சோலார் டார்ச் லைட்களும் அவர்கள் கூரை மழையில் ஒழுகாமல் இருப்பதற்கு தேவையானவற்றை கொடுத்து வந்தோம் . 
\



Free Vivekananda Book Shelf

சுவாமி விவேகானந்தரின் பதினொரு நூல்கள் கொண்ட pouch-கள்  சலூன் கடைகள் மற்றும் நூலகங்களுக்கு வழங்கப்பட்டது. 




Holy Mother Sri Sarada Devi's Memorial Day

 அன்னை சாரதா தேவியின் நினைவு தினத்தையொட்டி பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் மனநோயாளிகள் மற்றும் முதியோர் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் மரக்கன்றுகளும் நடப்பட்டன .

In our palani city we provided Annadhanam (free Food Parcels) to 200 road-side mentally disorders and old age people on the occasion of our Mother's memorial day  and tree saplings are also planted .